


Comments are not enabled for this post.
Loading comments...
Fetching the latest discussions
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரிவு 3 (1) மற்றும் (2) இன் கீழ் வழங்கப்பட்ட விதிகளின் படி, அதிகாரச் சட்டம் எண் 41, 1978 ஆம் ஆண்டின் சட்டத்தின் படி, குறிப்பிட்ட பகுதியை நகர அபிவிருத்தி பகுதி என்று கருதும் பட்சத்தில் அவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு, அதாவது அவர் அல்லது அவளுக்கு அதிகாரம் உள்ளது.
அதன் படி, தெஹிவளை - கல்்கிசை மாநகர சபை பகுதியானது நகர அபிவிருத்தி பகுதியாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரால் 04 செப்டெம்பர் 1978 ஆம் திகதிய 41ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் தெஹிவளை - கல்்கிசை மாநகர சபைப் பகுதிக்கான அபிவிருத்தித் திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நடைமுறை காலக்கட்டம் 2022 - 2031 ஆகும்.
அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கம் நிலையான வளர்ச்சியை அடைவதாகும். திட்டமிடல் பகுதியின் பெளதீக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 2020 ஆம் ஆண்டின் தகவல்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் முதல் பிரிவு, திட்டத்தின் அறிமுகம், பின்னணி ஆய்வுகள் மற்றும் திட்டத்தின் தேவையை உள்ளடக்கியதாகும்.
இரண்டாவது பிரிவு தூரநோக்கு, இலக்குகள், நோக்கங்கள், திட்டம், கருத்துத்திட்டம், அபிவிருத்தி உத்திகள், முன்னுரிமை செய்யப்பட்ட திட்டங்களின் சுருக்கங்கள், வலய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
அறிக்கையின் மூன்றாவது பிரிவு, அடையாளம் காணப்பட்ட சிக்கல்களின் ஆழமான பகுப்பாய்வின் அடிப்படையில் திட்டத்தின் தேவையை தொடர்பான விரிவான விளக்கத்தை கொண்டுள்ளது.
அறிக்கையின் அடுத்த பகுதி நான்காவது அதிகாரத்துடன் தொடங்குகிறது. அதேவேளையில் தெஹிவளை - கல்்கிசை பிரதேசம் தொடர்பான எதிர்கால தூரநோக்கை முன்வைக்கிறது.
திட்டமிடலை பாதிக்கக்கூடிய பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட தூரநோக்கை அடையும் வழிகள் ஐந்தாவது அதிகாரத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
ஆறாவது அதிகாரம் எதிர்காலத்தை நோக்கிய பாதையை, நீண்டகால இலக்குகள் மூலம் அபிவிருத்தி எவ்வாறு அமையும் என்பதை விரிவாக விளக்குகிறது. மேலும் 2022 - 2031 காலத்திற்கான முன்மொழியப்பட்ட நிலப்பயன்பாட்டு திட்டம் மற்றும் மூலோபாயத்தையும் விவரிக்கிறது.
சமூக மற்றும் பெளதீக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்ட திட்டங்கள், பொருளாதார மேம்பாடு, அதை அடைவதற்கான அபிவிருத்தி முன்மொழிவுகள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இறுதி அதிகாரம் வலயங்கள், வலய எல்லைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட வலய சார்ந்த விதிமுறைகள் குறித்து விளக்குகிறது. மேலும் ஒவ்வொரு வலயத்திற்குமான நிலம் மற்றும் கட்டிட அபிவிருத்தி விதிமுறைகளையும் அறிமுகப்படுத்துகிறது.